districts

img

தோழர் இரா.வேணுகோபால் 2ஆம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட அலுவலக ஊழியர் இரா.வேணுகோபாலின் 2 ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழனன்று (ஆக.15) அனுசரிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயசங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், டி.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.