சென்னை, மார்ச் 21- சென்னையில் மோசமான நிலையில் உள்ள 27 ஆயிரம் குடியி ருப்புகள் படிப்படியாக இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திங்களன்று கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் தொகுதி உறுப்பினர் ஆர்.டி.சேகர் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் பதில்களும் வருமாறு: ஆர்.டி.சேகர்: பெரம்பூர் தொகுதி யில் பழுதடைந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வீடுகளை அரசு கட்டுமா? அமைச்சர் தா.மோ.அன்பரசன்: பெரம்பூர் தொகுதியில் 6 திட்டப் பகுதி யில் 3,258 அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வியாசர்பாடி டி.டி. பிளாக்கில் 468 குடியிருப்புகளுக்கான கட்டு மானப்பணிகள் முடிந்து பயனா ளிகளுக்கு விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.
வியாசர்பாடி
எம்.ஜி.ஆர். நகரில் 288 குடியிருப்புகள், வியாசர்பாடி பழைய பிளாக்கில் 192 குடியிருப்பு கள் மறு கட்டுமானம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி பழைய பிளாக், மல்லிப்பூ காலனி ஆகிய இடங்களில் 1044 குடியிருப்பு களுக்கான பழுது நீக்கும் பணிக்கு ரூ. 1 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. உதயசூரியன் நகர் திட்டப் பகுதியை தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு செய்து தற்போது மறுகட்டு மானப் பணி தேவை இல்லை என தெரிவித்துள்ளது. இதனால் வீடுகளை பழுது பார்க்கும் பணி கள் மேற்கொள்ளப்படும். குடியிருப்பு கள் மிக மோசமாக இருந்தால் புதுப்பித்து கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.டி.சேகர்: பெரம்பூர் தொகுதியில் சிதிலம் அடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக கட்டும் போது அதிகமான குடியிருப்புகள் வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கும் வீடுகள் வழங்கப்படுமா? அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு மறு கட்டுமானம் செய்யும் போது கிடைக்கும் அதிகபடியான குடியிருப்புகளை ஆண்டு வருமா னம் ரூ.3 லட்சத்திற்கு உட்பட்டவர்க ளுக்கு வேறு எங்கும் சொந்த வீடு இல்லாத பட்சத்தில் பொரு ளாதாரத்தில் நலிவுற்ற இதே பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு கலெக்டரின் பரிந்துரையின்படி பயனாளிகள் தங்களது பங்களிப்பு தொகையை செலுத்த முன் வருபவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்க பரிசீலிக்கப்படும். சமீபத்தில் சென்னையில் வல்லுனர் குழு எடுத்த கணக் கெடுப்பில் 27,056 குடியிருப்புகள் மிக மோசமாக இருந்தது தெரிய வந்தது. மற்ற மாவட்டங்களில் 3,652 வீடுகள் உள்ளன. இவற்றை படிப்படியாக அப்புறப்படுத்தி விட்டு புதிய வீடுகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 7,500 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் 7,500 வீடுகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.