மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்.2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஞாயிறன்று (பிப்.16) ஆயிரம் விளக்கு பகுதி, வைகுந்தபுரத்தில் உண்டி வசூல் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வி வேணுகோபாலன், பகுதிச் செயலாளர் வே.ரவீந்திரபாரதி, பகுதிக் குழு உறுப்பினர்கள் இரணியன், ஏழுமலை, வெங்கடேசன், செந்தில்குமார், மூத்த தலைவர் இ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.