districts

img

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ்: 242 பைக்குகள் பறிமுதல்

சென்னை, ஜன. 1- சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட த்தின் போது பைக் ரேசில் ஈடுபட்டவர்களின் 242 இரு சக்கர வாகனங்களை பறி முதல் செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரி வித்துள்ளது.  சென்னை நகரம் முழுவதும் செவ்வாய்க்  கிழமை நடந்த வாகன தணிக்கையில் அதிவேக மாக வாகனங்கள் ஓட்டி யது, குடிபோதையில் வாக னங்கள் ஓட்டயவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பொது மக்கள் இரவில் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்வது வழக்கம். சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வான வேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.  நாடு முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என களைக்கட்டும். அப்போது, எவ்வித அசம்பா விதங்களும் நிகழாமல் தடுக்க சென்னையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் குடியிருப்புப் பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை விதித்திருந்தது 2025ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடு வதற்கு சென்னை பெரு நகர காவல்துறை சார்பில் விரிவான பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை, வழி பாட்டுத் தலங்கள், சாலை கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்திருந்த நிலையில் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டது.  இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்ட த்தின் போது பைக் ரேசில் ஈடுபட்ட 242 வாகனங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.