தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை,அக்.8- ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளது. சென்னை யில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பேருந்து கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. வரும் அக்டோபர் 11 ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 12ம் தேதி விஜயதசமி, 13ம் தேதி ஞாயிறு விடு முறை தினம் வருகிறது. மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. எனவே இதனை பயன்படுத்தி சென்னையில் இருக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயுத்தமாக்கி வருகின்றனர். கல்வி, வேலை நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் தங்கி உள்ள னர். இவர்கள் தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஒரே நேரத்தில் பலரும் பயணிப் பதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி வர உள்ள ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, சென்னை யில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தொடர் விடுமுறை இருப்ப தால் அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்ட மிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை யில் இருந்து வரும் புதன், வியாழக் கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளன. அரசு விரைவு பேருந்து களில் இதற்கான முன்பதிவு நடந்து வரு கிறது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து 2092 பேருந்துகள் வழக்கமாக இயக்கப் படும். புதன் கிழமை கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள், 10ம் தேதி 2000 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க ப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, கன்னி யாகுமரி, திருநெல்வேலி, நாகர் கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிகமான பயணிகள் தமிழகம் முழு வதும் உள்ள பல்வேறு மாவட்டங் களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந் துகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து போராடும் நிலைக்கு தொழிலாளர்களை அரசு தள்ளக்கூடாது சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
காஞ்சிபுரம், அக் .8- தமிழகத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மாநில அரசின் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் எனவும் , அரசு தொழிலாளர் களை போராடும் நிலைக்கு தள்ளக் கூடாது எனவும் நெய்வேலி சுரங்க தொழிலாளர் சங்க தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். சிஐடியு முன்னாள் செயலாள ரான அவர் செவ்வாயன்று (அக்.8) காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரம் கோரி அந்நிறுவனத் தொழி லாளர்கள் நடத்தி வரும் போராட் டத்தை ஆதரித்து பேசினார். கடந்த 1971 இல் சிம்சன் போராட்டம் நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் கருணா நிதி மவுனம் காத்த நிலையில், தொழி லாளர்களே வெற்றி பெற்றனர் என்றார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதையும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கு வதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. தொழிலாளர் சட்டங்களை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்றும் அப்போது தான் மாநிலத்தில் தொழில் அமைதி நிலவும் என்றும் கூறுகிறோம். மேலும் மாநில அரசாங்கமும் தனக்குள்ள கடமையை உணர்ந்து, தொழிலாளர்களை போராடும் நிலைக்கு ஒருபோதும் தள்ளக் கூடாது, நிறுவனத்தை அழைத்து தொழிற்சங்கத் துடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சம்சங் தொழிலாளர்கள் இடையே சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில பொதுச் செய லாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை,அக்.8- தமிழகத்தின் சென்னை முக்கிய தலை நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்னையில் வந்து தங்கி உள்ளனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அவர் களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயிலானது இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு ரயில் தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை வண்டி எண் 06184, தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், அதாவது அக்டோபர் மாதமும், 11, 18, 25, நவம்பர் மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29-ந் தேதிகளிலும், அதேபோல் வண்டி எண் 06185 கோவையில் இருந்து ஞாயிறு தோறும் அதாவது 13, 20, 27 அக்டோபர் மாதமும், 03, 10, 17, 24,நவம்பர் மாதமும், டிசம்பர் மாதம் 1-ந் தேதியும் இந்த ரயிலானது இயக்கப் படும். தாம்பரம்-கோவை வண்டி எண் 06184 சென்னை தாம்பரத் தில் இருந்து 6 மணிக்கு கிளம்பி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பன்ருட்டி, திருபத்திரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போதனூர் வழியாக கோவை மாவட்டத்தை சென்றடை யும். கோவை-தாம்பரம் அதேபோல் வண்டி எண் 06185 கோவை யில் இருந்து கிளம்பி போதனூர், கிணத்து கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருபதிரிபுலியூர், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிளை மாநாடுகள்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டம், தாம்பரம் பகுதி கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்:
தாம்பரம் பகுதி
சிட்லபாக்கம் கிளை - ஆர்.தமீம் பாட்ஷா
செம்பாக்கம் - இ. குழந்தைசாமி
தேவநேசன் நகர் பி - எல்.முருகானந்தம்
தேவநேசன் நகர் ஏ - ஆர். விஜயா
புது பெருங்களத்தூர் - பி.ஸ்ரீதர்
முடிச்சூர் - யயாதீன்
தாம்பரம் (பெ) - பி.வசந்தா
தாம்பரம் வடக்கு - பாஸ்கர்
தாம்பரம் தெற்கு - எஸ்.தங்கராஜ்
மாடம்பாக்கம் - தினகரன்
புதுநகர் - சரஸ்வதி
ஆட்டோ - சங்கு பாண்டியன்
மெப்ஸ் - ஏ - குமரேசன்
மெப்ஸ் - பி - முத்தையா
மெப்ஸ் - சி - வீரக்குமார்
ராஜகீழ்ப்பாக்கம் - அனுராதா
கிழக்கு தாம்பரம் - மதிவாணன்
மாற்றுத்திறனாளி - கிருஷ்ணன்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விருது
கூடுவாஞ்சேரி, அக்.8- நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், நகராட்சியில் பணியாற்றி 164 பெண் மற்றும் ஆண் தூய்மை பணியாளர்களில் 40 பணியாளர்களை சிறந்த பணியாளர்க ளாக தேர்வு செய்து விருது மற்றும் சமபந்தி வழங்கும் விழா நந்திவரத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி கலந்து கொண்டு 40 தூய்மை பணியாளர்களுக்கு சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கினார். இதனையடுத்து, 164 தூய்மை பணி யாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கினார்.
மரக்கன்றுகள் நடும் விழா
திருக்கழுக்குன்றம்,அக்.8- நெய்குப்பி கிராமத்தில் மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழாவில், 3ஆயிரம் பேர் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டனர். தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் பிஎன்ஒய் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பில், மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், திருக்கழுக்குன்றம் ஒன்றித்திற்கு உட்பட்ட நெய்குப்பி கிராமத்தில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா திங்களன்று நடந்தது.
திருத்தணி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம்
திருத்தணி,அக்.8- திருத்தணி நகரமன்ற கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருத்தணியில் நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இதில், நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி தலைமை வகித்தார். பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தவும், குடிநீர், சாலை, மின் விளக்கு, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய ஆணையர் பொறுப்பு ஏற்பு திருத்தணி நகராட்சி புதிய ஆணையராக பு.ரா.பாலசுப்பிர மணியம் திங்களன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம், அக்.8- காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில், களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் கலைச் செல்வி மோகனிடம், கிராமமக்கள் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியனூர் ஊராட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மூலம் நிர்வகிக் கப்பட்டு பல்வேறு அரசு நலத்திட்ட பணி களை மக்களை சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகின்றன. களியனூர் ஊராட்சி பகுதி என்பதால் அங்கு வாழும் பொதுமக்கள் விவசாயத்தை நம்பியும், கூலி வேலை செய்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை செய்தும் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி வசித்து வருகின்றனர். தற்சமயம், காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்க பகுதியில் காஞ்சி புரம் சுற்றுவட்டார பகுதிகளை ஒன்றி ணைத்து மாநகராட்சி பகுதிகளில் சேர்த்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், களியனூர் ஊராட்சி பொதுமக்கள் தங்களுக்கு மாநகராட்சி பகுதி யில் ஊராட்சியை சேர்த்தால் விவசாய நிலங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு போன்றவைகள் கிடைக்கப்பெறாமல் அன்றாட வருமானத் திற்கு திண்டாடும் நிலை ஏற்படும் என்றும், எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என களியனூர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனி டம், தங்கள் பகுதியை மாநகராட்சி பகுதியில் சேர்க்க வேண்டாம் என மனு அளித்தனர்.
கிண்டி ரேஸ் கோர்சில் 4 குளங்களை சென்னை மாநகராட்சி ஏற்பாடு!
சென்னை,அக்.8- தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் சில முக்கிய ஏற்பாடுகளை சென்னை மாநக ராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. வேளச்சேரி ஏரி தொடர்பான வழக்கு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த ஏரியின் பரப்பு பெரிதும் குறைந்துவிட்டது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. குப்பைகள் கொட்டுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரிக்கை யில், வேளச்சேரியை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நீர்நிலைகளை புதிதாக அமைக்கலாம். தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு இதுதொடர்பாக அரசு செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதுதொடர்பாக ஆலோசித்த தமிழக அரசு களத்தில் இறங்கியுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மொத்தம் 4 குளங்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இதில் முதல் குளத்திற்கான வேலைகள் திங்களன்று தொடங்கின. கிண்டி ரேஸ் கோர்ஸில் குளங்கள் ஒவ்வொரு குளமும் 3,000 சதுர மீட்டர் அளவில் இருக்கும். 10 அடி ஆழம் கொண்ட தாக இருக்கும். மொத்தமாக 12,000 சதுர மீட்டர் அளவில் 4 குளங்களும் காணப்படும். இவற்றில் 1.5 லட்சம் கன மீட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இது மட்டும் சாத்தியமா னால் கிண்டி, வேளச்சேரி, அடையாறு பகுதி களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து மழை நீர் வடிகால்கள் ராஜ்பவன் கால்வாய் வழியாக கிண்டி ரேஸ் மைதானத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்படும். வருங்காலத்தில் இந்த குளங்களில் இருந்து அடையாற்றில் மழைநீர் கலக்குமாறு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஏற்கெ னவே மூன்று குளங்கள் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி அடுத்த திட்டம் பராமரிக்கப்படாமல் இருக்கும் அந்த 3 குளங்களும் தூர்வாரப்படாமல் பாழடைந்து காணப்படுகிறது. இவற்றை சரிசெய்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர். சென்னை மாநக ராட்சியை பொறுத்தவரை ரேஸ் கோர்ஸ் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, செல்லம் மாள் கல்லூரி வழியாக அடையாறு வரை செல்லக்கூடிய வடிகாலை வருங்காலத்தில் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்க நுண்கதிர் தொழில் நுட்ப பணியாளர்கள் வலியுறுத்தல்
கடலூர், அக்.8- தமிழ்நாடு அரசு நுண்கதிர் தொழில் நுட்ப பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. மாநில தலைவர் ந.சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ரம்யா வரவேற்றார். மாவட்ட தலைவர் தனசேகர், மாநிலத் துணைத் தலைவர் நல்லதம்பி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஒப்பந்தமுறை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எக்ஸ்ரே படங்கள் பற்றாக்குறையாக உள்ளது. நோயாளிகள் பல் எக்ஸ்ரே படம் எடுக்க முடியாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்று பல் எக்ஸ்ரே படம் எடுக்கும் சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பல் எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு மாவட்ட மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, அக்.8- சென்னை உயர்நீதி மன்றம், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அரசு தலைமை குற்றவி யல் வழக்குரைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் அல்லாதவர் முன்னுரிமை இல்லாதவர் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 34 வயதுக் குட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை, அரசு தலைமை குற்றவி யல் வழக்குரைஞர் அலு வலகம், சட்ட அலுவலர் கள் காலிடம், சென்னை - 600 104 என்ற முகவரிக்கு அக்.25 மாலை 5.45க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்ப உரையின் மேல் அலு வலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் என்று எழுதப்பட இருக்க வேண்டும். சென்னை மாவட்ட த்தை சேர்ந்த விண்ணப்ப தாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் புகைப்படம், கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் பிற நகல்கள் இணைந்து Self envelope cover fixed with ரூ.50 Postal Stamp அனுப்ப வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஓர் செய்தி குறிப்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.