கிருஷ்ணகிரி ஆக.12-
ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (37) இவர் 4 ஆண்டு களுக்கு முன்பு ஓசூர் ராஜாஜி நகரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி யின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுதா தனது தீர்ப்பில், “குற்றம் சாட்டப் பட்ட வினோத் குமாருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ஆயி ரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இந்த தண்ட னையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.