districts

2 இளைஞர்கள் ஹரிஷ் கையில் வைத்திருந்த செல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர்

சென்னை, ஜூன் 4-

    ஏழுகிணறு, மிண்ட் தெருவில் வசித்து வரும் ஹரிஷ் (17) என்பவர் வெளியூர் சென்றுவிட்டு,  சனிக்கிழமை காலை சுமார் 5.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஏழுகிணறு, அம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கையில் செல்போன் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஹரிஷ் கையில் வைத்திருந்த செல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர். இது குறித்து ஹரிஷ் ஏழுகிணறு காவல் நிலையத் தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொள் ளப்பட்டது. போலீசார் தீவிர  விசாரணை செய்து குற்ற  சம்பவத்தில் ஈடுபட்ட காமேஷ் (வயது 19) என்ப வரை கைது செய்தனர். மேலும் மேற்படி குற்ற சம்ப வத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் பிடிபட்டார்.  

   அவர்களிடம் இருந்து  1 செல்போன், 1 இருசக்கர  வாகனம் பறிமுதல் செய்யப் பட்டது. கைது செய்யப்பட்ட காமேஷ் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட் டார். 17 வயது சிறுவன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப் பட்டார்.