districts

சாலை விபத்தில்  பள்ளி மாணவன்  உட்பட 2 பேர் பலி

ஜோலார்பேட்டை, ஜன. 6- ராணிப்பேட்டை மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை முத்தானும் பகுதியை சேர்ந்தவர் ஷாருக்கான் (28). இவரது சகோதரர் அக்கீம் (30). இருவரும் ஆடு வியாபாரம் செய்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அப்துல் சலாம் (9) இவர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் 4 பேரும் வெள்ளிக் கிழமை (ஜன.6) அதிகாலை புதுப்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு ஆடுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரியில் சென்று கொண்டிருந்தனர். மினி லாரியை சஞ்சீவ் (29) என்பவர் ஓட்டினார். பையணப்பள்ளி கூட்ரோடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கொரியர் லாரி மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியில் இருந்த ஷாருக்கான் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்துல் சலாம் இறந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;