districts

img

பண்ருட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதல்: 2 பேர் பலி

கடலூர், ஆக.4- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சூரக்குப் பத்தைச் சேர்ந்த  அஞ்சாபுலி (40) இவர்களுடைய உறவினரான சென்னை மயிலாப்பூர் பகுதி சேர்ந்த கௌரி (56) மற்றும் பண்ருட்டியை சேர்ந்த  பரமேஸ்வரி, நிலவழகி, ராமச்சந்திரன், லல்லி  ஆகியோர் ஆட்டோவில் பண்ருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பில் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வரும் பொழுது பனிக்கன்குப்பம் அருகே  பின்னால் வந்த  காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னே சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.  இதில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் உட்பட ஏழு பேர் பலத்த காயம் அடைந்தது இதில் சம்பவ இடத்திலேயே கௌரி, அஞ்சாபுலி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.