மெரினாவில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி
சென்னை, ஜன.28- சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் (வயது 61), ராஜி (35). மீனவர்கள். இவர்கள் இருவரும் செவ்வாயன்று அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய படகு கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் பாஸ்கர், ராஜி ஆகிய இருவரும் கடலில் மூழ்கினர். சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. அவர்களது படகு மட்டும் விவேகானந்தர் இல்லம் அருகே கரை ஒதுங்கியது. போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
உதயம் திரையரங்கம் இடித்து அகற்றம்
சென்னை, ஜன. 28- சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. இந்நிலையில் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறு வனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதும் இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி சொல் தமிழா சொல்
சென்னை, ஜன,28- எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சொல் தமிழா சொல் 2025 என்னும் தலைப்பில் பிரமாண்டமான பேச்சுப்போட்டியை நடத்தியது.. தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இப்பேச்சுப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது. முதல் மண்டலமாக சென்னை மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பின்வருமாறு முதல் பரிசு ரூ. 1 லட்சம் - எஸ். பாண்டி கணேஷ், சென்னை கிறிஸ்தவ கல்லூரி. இரண்டாம் பரிசு - ரூ.75 ஆயிரம் - இல.சஞ்சனா, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி. மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் சு. சதீஷ்குமார், சென்னை பல்கலைக்கழகம் சென்னை மண்டலப் போட்டியின் இறுதிச்சுற்று நடுவர்களாகப் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், பேராசிரியர் விமலா அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்றோருக்குச் சான்றிதழ் களை தமிழ்ப்பேராயம் தலைவர் கரு. நாகராஜன் வழங்கிச் சிறப்பித்தார்.
மாதர் சங்க கிளை உதயம்
சென்னை, ஜன. 28 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரவாயல் பகுதி, ஸ்ரீ லட்சுமி நகரில் புதிய கிளை ஞாயிறன்று (ஜன.26) உதயமானது. சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, துணைத் தலைவர் பிச்சையம்மாள், பகுதி தலைவர் கவிதா, பொருளாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக சின்ன பொண்ணு, செயலாளராக தரணி, பொருளாளராக மகாலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய காப்பீட்டுத்திட்டம்
சென்னை, ஜன,28- இந்தியாவின் முன்னணி ஆன்லைன் இன்சூரன்ஸ் தளமான ரீநியுபை எல்ஐசி மற்றும் ஐசிசிஐயுடன் இணைந்து ஸ்மார்ட் டெர்ம் என்ற புதிய காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டெர்ம் பிளான்கள் தேவைப்படுபவர்களுக்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் இந்திரனீல் சாட்டர்ஜி கூறினார். இன்றைய நுகர்வோரின் வளர்ந்து வரும் காப்பீட்டுத் தேவைகளை இந்த திட்டம் நிவர்த்தி செய்யும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வீட்டு மனை வழங்கி வீடு கட்டித்தர நரிக்குறவர் மக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி, ஜன.28 - திருக்கோவிலூர் அருகே வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித் தர வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவி லூர் அருகே உள்ள டி.கீரனூர் கிராமத்தில் 35 தொகுப்பு வீடுகளில் 95 குடும்பங்கள் வசித்து வரு கிறோம். சுமார் 53 ஆண்டு களுக்கு முன்பு வழங்கப் பட்டது. இந்த வீடுகள் அனைத்தும் தற்போது சேதமடைந்துள்ளது. வசிப்பதற்கு பயனற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இது குறித்து வரு வாய் துறை அதிகாரி யிடம் பலமுறை மனு அளித்தும் இதனால் வரை எந்தவிதமான நட வடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, தங்கள் பகுதியை நேரில் பார்வையிட்டு வீட்டு மனை பட்டா வழங்கி, புதி தாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.