சென்னை, ஜூலை 17-
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று துறை ஆசிரியர்களுக்கு வரும் ஜூலை 24, 25 ந் தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
நமது முன்னோர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை அரும் பொருட்கள் மூலம் வளரும் தலைமுறை யினருக்கு எடுத்துச்செல்லும் அரிய பணியை சென்னை அரசு அருங்காட்சியகம் கடந்த 170 ஆண்டுகள் நிகழ்த்தி வருகிறது.
நமது பெருமை மிக்க கலை மற்றும் தொல்லியல் தொடர்பான வரலாற்றை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களில் பணிபுரியும் வரலாற்று துறை ஆசிரி யர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இரு நாட்கள் “நமது கலை மற்றும் தொல்லியல் அறிவோம்” என்கிற தலைப்பில் பயில ரங்கம் நடைபெறுகிறது.
இப் பயிலரங்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி களில் வரலாற்றுத் துறையில் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரி யர்கள் கலந்து கொள்ளலாம். இரண்டு நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.