வேலூர், ஜன.10 – வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணைவேந்தர்கள் 2 நாள் கருத்தரங்கம் வெள்ளியன்று துவங்கியது. கருத்தரங்கிற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தலைவர் வினய்குமார் பதக் தலைமை தாங்கி பேசினார். விஐடி துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். கருத்தரங்கில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பங்கஜ் மிட்டல், துணைத்தலைவர் ராஜசேகரன் பிள்ளை ஆகியோர் கருத்துரை வழங்கினர். விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசிரியர் ரூபன்குமார் நன்றி கூறினார்.