districts

குட்கா பதுக்கி விற்ற 19 பேர் கைது

சென்னை,மார்ச்.7- சென்னையில் புகையிலை பதுக்கி விற்ற வழக்கில் மடிப்பாக்கம், திருவான்மியூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதி களில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் புகையிலை, குட்கா பதுக்கி விற்ற தாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மடிப்பாக்கம் பகுதியில் புகையிலை பதுக்கி விற்ற இப்ராகிம், திருவான்மி யூரில் உமர்பாரூக், முகம்மது ஷானவாஸ், மாதவரத்தில் பாலசுப்பிரமணி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 606 கிலோ குட்கா, 2 செல்போன், ரூ.6400  ரொக்கம், மோட்டார் சைக்கிள், 2 ஆட்டோ ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்ட விரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை  செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;