districts

img

சிதம்பரத்தில் 17 புதிய அரசு பேருந்துகள் துவக்கம் …

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பில் செவ்வாயன்று  பல்வேறு வழித்தடங்களில் 17 புதிய பேருந்துகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்,மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன்,சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, சிதம்பரம் நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.