கடலூர்,ஜன.27- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. கோவிந்தராஜன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான ஷாஜாதி கோவிந்தராஜன் ஆகியோரது 16 ஆவது நினைவு தினம் நெல்லிக் குப்பத்தில் உள்ள நினைவு இடத்தில் அனுசரிக்கப் பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி. உதயகுமார், வி.சுப் பராயன், பகுதி செயலாளர் ெஜயபாண்டியன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.ஆள வந்தார், வி. கிருஷ்ண மூர்த்தி, மூத்த வழக்கறிஞர் ஜம்கிராஜ், வாலிபர் சங்கத் தலைவர் கிருஷ்ணன், மூத்த நிர்வாகிகள் ஆர்.வி. சுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.