16 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்
கிருஷ்ணகிரி, செப் .14- தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரு கிறார்.2 நாட்களுக்கு முன் சிறுமி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் குடிமேனஹள்ளி தென் பெண்ணை ஆற்றுப்பகுதி யில் விநாயகர் சிலையை கரைக்க சென்றார். அப்போது ஆற்றங் கரையில் உட்கார்ந்திருந்த சிறுமி, திடீரென மாயமா னார். குடும்பத்தினர் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாரண்ட அள்ளியை சேர்ந்த 21 வயது பெருமாள் (எ) ஆகாஷ் என்ப வர் மகளை கடத்தி சென்றி ருக்கலாம் என்று கூறினர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 28.31 லட்சம் மோசடி
ஓசூர், செப்.14- ஒசூர் ரயில் நிலையம் அருகில் நேரு நகரில் வசித்து வரும் 30 வயது சர வணன் தனியார் நிறுவனத் தில் பணியாற்றி வருகிறார். இவரது கைப்பேசி வாட்ஸ்ஆப்-க்கு கடந்த மே 14-ஆம் தேதி ஒரு குறுந் தகவல் வந்துளளது. அதில் குழு அமைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவித்து துள்ளனர். இதை நம்பிய சரவணன் மா்ம நபா்கள் அனுப்பிய 16 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.28.31 லட்சம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு சரவணனுக்கு எந்த தகவலும் வர வில்லை. அவரது கைப்பேசி எண் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புகார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் 8392 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை, செப். 14 – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய தொகுதி குருப் 2, இரண்டு ஏ தேர்வினை ராணிப் பேட்டை மாவட்டத்தில் அரக்கோ ணம் மற்றும் ராணிப்பேட்டையில் 8,392 பேர் தேர்வு எழுதினர். 2,595 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்., வாலாஜா, ஆற்காடு மற்றும் அரக்கோணம் ஆகிய வட்டத்தில் 3 வட்டாட்சியர்கள் ஒருங்கிணைப்பாளர் களாகவும், 11 வருவாய்த் துறை பணியாளர்கள் சுற்றுக் குழுக்களாகவும் செயல்பட்டனர். தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் வரு வாய் கோட்டாட்சியர் ராஜராஜன், வட்டாட்சியர்கள் அருள்செல்வம், பாக்கியலட்சுமி, ஸ்ரீதேவி ஆய்வில் கலந்துகொண்டனர்.
சிபிஎம் கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகிறது. மத்திய சென்னை மாவட்டம், துறைமுகம் பகுதியில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்களின் விவரம்
வருமாறு:
54 வது வட்ட கிளை - எஸ்.ரங்கராஜன்
55 வது வட்ட கிளை - ஏ.மைக்கேல்
55 வது வட்டம் பெண்கள் கிளை - டி.தேவி சங்கர்
56வது வட்ட கிளை - கே. வடிவேல்
56வது வட்டம் பெண்கள் கிளை - பி.மகேஸ்வரி
59 வது வட்ட கிளை - எஸ்.தமிழரசன்
வியாபாரிகள் அரங்க கிளை - எஸ்.எம். பாட்ஷா
வியாபாரிகள் அரங்க ஏ கிளை - ஏ .அப்துல் சமது
வியாபாரிகள் அரங்க பி கிளை - ஏ .அப்பாஸ்
வியாபாரிகள் அரங்க சி கிளை - ஏ.பாபு
வியாபாரிகள் அரங்க டி கிளை - டி.ஸ்ரீகுமார்
தையல் அரங்க கிளை - கே.எஸ். ஜீவானந்தம்
சுமைப்பணி அரங்க கிளை - பி.சுப்பிரமணியன்