districts

சென்னை முக்கிய செய்திகள்

சைதாப்பேட்டையில் 150 கிலோ குட்கா பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை,பிப்.9- சைதாப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 150 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை, சாரதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சைபுல் ஹக் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், ரெமோ உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சைபுல் ஹக் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போதை பொருட்களை  தடை செய்ய வலியுறுத்தல்

 திருவள்ளூர், பிப்.9- பள்ளி வளாகத்தில் புழங்கும் போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சங்கம் கிளை மாநாடு ஞாயிறன்று (பிப் 9), கன்வீனர் ஏ.டெல்லி கணேஷ் தலைமையில்  நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.டிக்சன் நிறை உரையாற்றினார். கிளையின் முன்னணி ஊழியர்கள் எஸ்.சுனில், எஸ்.முக்கேஷ், டி.அஷ்வின், வெற்றி ஆகியோர் பங்கேற்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அரசு பள்ளி வளாகங்களில் போதை வஸ்துக்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும், பள்ளியில் குடிநீர், கழிவறைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில்  இரும்பு துண்டு-கற்கள்

சென்னை, பிப்..9- சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். இதில் திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் லூப் லைன் பாதை உள்ளது.இந்த இணைப்பு தண்டவாளத்தின் இடையே பெரிய இரும்பு துண்டு மற்றும் கற்களை மர்ம நபர்கள் வைத்து சென்று விட்டனர். அவ்வழியே ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்ய சென்ற போது இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அகற்றினர்.சரியான நேரத்தில் இணைப்பு தண்டவாளத்தில் இருந்து அவை அகற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ரயிலில் கஞ்சா கடத்தல்

காஞ்சிபுரம், பிப்.9 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் வீட்டில் வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பெரும்புதூர் ஒரகடம், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் மேற்கு வங்க வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக அந்த தகவலை எடுத்து அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மதுவிலக்கு காவல்துறையினர் பாங்குரா கிராமத்தை சேர்ந்த கோபிரூபிடஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையில் கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் எடுத்து வந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் , திருப்பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் பாக்கெட் போட்டு ஒரு பாக்கெட் 500 ரூபாய் என்று சில்லறை விற்பனை செய்வதாக அவர் ஒப்புக்கொண்டார். அதன் பேரில் ஒரகடம் கண்டிகை சந்திப்பில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1.500 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேற்படி அந்த வாலிபரை கைது செய்து  திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர்களுக்கு பாராட்டு 

சிதம்பரம், பிப். 9- திருச்சியில் நடைபெற்ற சாரண, சாரணியர் வைரவிழா வில்  கடலூர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிதம்பரத்தில் பாராட்டு விழா நடை பெற்றது. திருச்சியில்  கடந்த ஜனவரி 28 ஆம் முதல் பிப் 3 ஆம் தேதி வரை 75 ஆம் ஆண்டு சாரணர் மற்றும் சாரணியர்கள் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருதிறலணி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து  32 சாரண சாரணியர்கள்,  3 சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சி களிலும் கலந்து கொண்டு சான்றி தழ்களை பெற்ற னர். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்க ளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  சிதம்ப ரம் வீனஸ் கல்வி குழும பள்ளிக ளின் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கி பாராட்டி சான்று வழங்கி னார்.