சென்னை, ஜூலை 19-
ராணிப்பேட்டையில் ரூ.145 கோடியில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைக்கு சென்னை தலைமைச் செய லகத்திலிருந்து புதனன்று (ஜூலை 19) காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், தொழிலக மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வரும் எஸ்.ஓ.எல். இந்தியா பிரைவேட் லிமி டெட் நிறுவனத்தின் விரி வாக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 145 கோடி முத லீட்டில் ராணிப்பேட்டை சிப்காட் நிலை 3-இல் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்வதற்கு அதி நவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார்.
இந்த விரிவாக்கத்தின் மூலம், தற்போது நாளொன்றிற்கு 80 டன் என்ற அளவில் உள்ள அதன் உற்பத்தித் திறன், நாளொன்றிற்கு 200 டன் என்ற அளவிற்கு அதி கரிக்கும். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.