அரசு மருத்துவத் துறையில் உள்ள 1350 மருந்தாளுநர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வி.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் எஸ்.ஹேமலதா, மாவட்டத் தலைவர் எஸ்.செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரன், தங்கசாலை பகுதி தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் பேசினர்.