districts

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகிறது பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தகவல்

சென்னை,ஆக.12- 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு தில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஏற்கனவே கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்களு டன் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் எட்டு மண்டலங்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில கல்விக்கொள்கை உருவாக்கு வதற்கான குழுவின் ஆலோ சனைக் கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடை பெற்றது. துறைச் செயலாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரி வித்தனர். இதில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாநில கல்விக் கொள்கை உரு வாக்குவதற்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், “பள்ளிக்கல்வித்துறை யில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட வேண்டி யுள்ளது. இதற்குரிய இடங்கள் இருந்தும், தேவையான நிதி கள் ஒதுக்கப்படாமல் உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித் துறையில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டியுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில், ஆண்டுதோறும் காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலைமை உள்ளது.

இதற்காக தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதிலும் அரசிடம் நிதி பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. நீட் தேர்வை வெறும் 10 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்க ளுக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில், பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கலாம்.

;