districts

சென்னையில் 11 கிமீ பிரமாண்ட மேம்பாலம் அமைக்க ஆய்வுப் பணிகள் தொடக்கம்

சென்னை, அக்.11- சென்னையில் போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அடையாறு, கிரீன்வேஸ் சாலை, சாந்தோம் பிரதான சாலை, காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலுக்கு தீர்வு காண மெரினா வில் உள்ள கலங்கரை விளக்கம் (லைட் அவுஸ்) சந்திப்பில் இருந்து கிண்டி  வரை பிரமாண்ட உயர்மட்ட  மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்ட மிட்டுள்ளது. லைட் அவுசில்  இருந்து கச்சேரி ரோடு, சாந்தோம் சந்திப்பு, பட்டி னப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, டாக்டர் முத்துலட்சுமி  பூங்கா, அடையாறு, மத்திய கைலாஸ், கோட்டூர்புரம், செல்லம்மாள் கல்லூரி, சின்னமலை, கிண்டி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மொத்தம் 11 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த மேம்பாலம் அமைப் பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.    4 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போக்கு வரத்து ஆய்வுகளின்படி இரண்டு முக்கிய இடங்  களையும் இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைப்பது என்று முடிவு செய்யப்படுள்ளது. இந்த பகுதிகளில் சாலையை அகலப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரையிலான 11 கிலோ மீட்டர் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரப் பட்டு உள்ளது. உள்கட்ட மைப்பு திட்டத்திற்கான விரி வான சாத்தியக்கூறு அறிக்கையை (டி.எப்.ஆர்.) தயாரிப்பதற்காக ஆலோசகரை நியமிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.45 லட்சத்தை அனு மதித்துள்ளது. நிலப்பரப்பு, மண் ஆய்வு, போக்குவரத்து பகுப்பாய்வு உள்ளடக்கிய பணிகளை முடிக்க 6 மாதங்கள் வரை ஆகும். அதன் பிறகு மேம்பாலம் கட்டுவதற்கான ஏற்பாடு பணி தொடங்கும். இந்த மேம்பாலம் சென்னையின் நீளமான மேம்பாலமாக இருக்கும்.

;