சென்னை, ஜூன் 20 - சென்னை பள்ளிகளில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.53 விழுக்காடு, 10ம் வகுப்பில் 75.84 விழுக்காடு என்ற அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர் நிலைப் பள்ளிகளும் உள்ளன.
12ம் வகுப்பு
2021 - 2022 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 2478 மாணவர், 3164 மாணவியர் என 5642 பேர் எழுதினர். இதில் 1,975 மாணவர், 2,907 மாணவியர் என 4882 பேர் (86.53 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதவியல், வேதியியல், வணிகக் கணிதம் பாடங்களில் தலா ஒருவர், பொருளியல் பாடத்தில் 6, வணிகவியல் பாடத்தில் 16, கணக்கு பதிவியல் பாடத்தில் 17, கணினி அறிவியல் பாடத்தில் 4, கணினி பயன்பாடுகள் பாடத்தில் 5 என 51 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் 551க்கு மேல் 47 பேரும், 501 லிருந்து 550 வரை 164 பேரும், 451 லிருந்து 500 வரை 382 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.61 விழுக்காடு, சைதாப் பேட்டை சென்னை பெண்கள் மேல் நிலைப் பள்ளி 98.28 விழுக்காடு, புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப் பள்ளி 97.63 விழுக்காடு என அடுத் தடுத்த இடங்களை பெற்றுள்ளன. 13 பள்ளிகள் 90 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.
10ம் வகுப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 3368 மாணவர், 3080 மாணவியர் என 6448 பேர் எழுதினார்கள். இதில் 2262 மாண வர், 2628 மாணவியர் என 4890 (75.84 விழுக்காடு) பேர் தேர்ச்சிப் பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் 2 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ள னர். 451க்கு மேல் 24 பேர், 401 லிருந்து 450 வரை 148 பேர், 351 லிருந்து 400 வரை 359 பேர் என மதிப்பெண் பெற்றுள்ளனர். சூளைமேடு சென்னை உயர்நிலைப் பள்ளி 100 விழுக்காடு, வண்ணாரப் பேட்டை சென்னை உருது உயர்நிலைப் பள்ளி 97.67 விழுக்காடு, புல்லா அவென்யூ சென்னை உயர்நிலைப் பள்ளி 97.56 விழுக்காடு என தேர்ச்சி பெற்றுள்ளன. 13 பள்ளிகள் 90 விழுக் காட்டிற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.