சென்னை, மார்ச் 7- சென்னை ராணி மேரி கல்லூரியில் “பெண்களின் ஆரோக்கியம்” குறித்த தேசிய அளவிலான கருத்த ரங்கு செவ்வாயன்று நடை பெற்றது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப் பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:- பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்க ளுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணி கள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள மருத்துவ மனைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த வேதனையை போக்குவ தற்காக தான் 108 ஆம் புலன்ஸ் சேவை தொடங் கப்பட்டது. இதன்மூலம் கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து துணிவுடன் புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும். மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.