districts

img

108 ஆம்புலன்ஸ் சேவை தனியார் மயம்: தொழிலாளர் சங்க மாநாடு எதிர்ப்பு

ராணிப்பேட்டை, அக்.3 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தனியார் மயமாக்கி பெயரளவிற்கு சேவையாக நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட 2ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது. யோகநாதன் தலைமையில் வாலாஜாவில் நடைபெற்ற மாநாட்டில்  சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.ராஜேந்திரன் சிறப்புரை யாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் ஜெகதீசன், ராணிப்பேட்டை சிஐடியு மாவட்டப் பொருளாளர் என். ரமேஷ், துணைத் தலைவர் ஆர். மணிகண்டன், வழக்கறிஞர் சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், இலவச அமரர்  ஊர்தி மற்றும் தாய் சேய் நல ஊர்தி ஓட்டு நர்கள் சங்கம் ஜேம்ஸ் ஆகியோர் உரை யாற்றினர். தீர்மானங்கள் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் சட்டப்படியான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டவிரோத விசாரணையின் மூலம் பணியிட மாறுதல் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பொது சுகாதாரத்தை முறையாக பராமரிக்க வேண்டும், 108  ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை முறையாக  பராமரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.