திருவள்ளூர், ஜன.6- தனியார் யோகா பயிற்சி மைய மாணவர்கள், 105 பேர், ஒரே நேரத்தில் தொடர்ந்து, 10 நிமிடங்கள், அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் நின்று, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷனின் தமிழ்நாடு பிரிவு இணைந்து, யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில், மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெகதாம்பிகா, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் திலகா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில், ஒரே நேரத்தில், 105 மாணவர்கள், தொடர்ந்து, 10 நிமிடங்கள் அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.