திருவள்ளூர், ஏப்.19- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன். 100 வயதான ஸ்டீபன் 1954 ஆண்டு தொடங்கி காமராஜர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்தி வருகிறார் . வெள்ளியன்று (ஏப் 19), நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளருக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அருகாமையில் உள்ள தனது வீட்டில் இருந்து பூத் எண் 220 க்கு சென்று வாக்கு செலுத்தி விட்டு கையை உயர்த்தி காண்பித்து 100 வயதிலும் ஜனநாயக கடமையான வாக்களிப்பது அனைவரின் கடமை என அனைவருக்கும் உணர்த்தினார். 1954 ஆம் ஆண்டு காலம் முதல் தற்போது 70 ஆண்டு காலமாக வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.