விழுப்புரம், மே 10- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் கெங்கபுரம் ஊராட்சியில் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மேல் மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று (மே 10) காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மேல்மலை யனூர் வட்டச் செயலாளர் பி.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் பேசுகை யில், “வெளியூரில் உள்ள வர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தாக கெங்கபுரம் ஊராட்சி யில் உண்மைக்கு மாறாக கணக்கு எழுதி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திரு க்கிறார். மரணமடைந்த வர்களின் பெயரில் அரசின் தொகுப்பு வீடுகள் வழங்கி யிருக்கிறார்கள். தனிநபர் கழிவறை திட்டத்திலும், சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை புனரமைப்பு செய்ததில் முறைகேடும் செய்திருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றார். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எழில்ராஜா, மூத்த தோழர் உதயகுமார், சி.குமார், கே.ரவி, ஏழு மலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்கு நர் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று, அனுமதி பெற்று மாவட்ட அளவில் விசா ரணை அலுவலர் நியமனம் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என எழுத்துப்பூர் வமாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் காத்திருக்கும் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.