செய்யூர், பிப்.4- செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படு கிறது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வலியுறுத்தி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்குழு உறுப்பினர் ஜி.கோவிந்தசாமி தலைமையில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடைபெற்றது. இதில், 2024-25ம் ஆண்டில் நூறுநாள் வேலை வாய்ப்பு தொடர்ந்து மற்றும் உடனே வழங்க வேண்டும். மேலும், 5 வாரங்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், 200 நாள்வேலை வழங்கவேண்டும், ரூ.600 கூலி வழங்க வேண்டும், நூறுநாள் வேலை வாய்ப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சி காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அக்கட்சியின் வட்ட செயலாளர் க.புரு ஷோத்தமன், மாவட்ட உறுப்பினர்கள் எஸ்.ரவி, எம்.வெள்ளிகண்ணன், மு. தமிழ் பாரதி, வட்டக்குழு உறுப்பபினர்கள் முகுந்தன், ஐயப்பன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தயநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாலை வரை வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சு வார்த்தைக்கு வராத காரணத்தால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.