districts

img

நூறு நாள் வேலை கேட்டு மறியல்

கடலூர், ஆக.3- கடலூர் ஊராட்சி ஒன்றியம் சி.என்.பாளையத்தில் 100 நாள் வேலை முறையாக கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமை மறியல் போராட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, நடராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை கடலூர் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் பேச்சு வார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் அனைவருக்கும் வேலை தருவதாக எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு மறியல் போராட்டம் கைவிப் பட்டது.