districts

img

நூறு நாள் பணி கோரி முற்றுகை

காஞ்சிபுரம், ஜூலை 5 -  காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராம பொது மக்கள் நூறு நாள் வேலை வாய்ப்பு மீண்டும் வழங்க கோரி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அதிக அளவு  பயனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பணியாளர் களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம நூறு நாள் பயனாளிகள் வியாழனன்று காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மீண்டும் அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்  கோமளாவிடம்  பேச்சு வார்த்தை நடத்தி பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மரக்கன்று திட்டங்களில் அதிக அளவில் மக்கள் பயன்பெற வேண்டும் என வும், அதற்குண்டான தொகையும் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப் படும் என்பதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டு மென கூறி விரைவில் இத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார். இருப்பினும் பொது மக்கள் சமாதானம் அடையா மல் தங்களுக்கு 100 நாள்  வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியதின் அடிப்படையில் விரைவில் அப்பகுதியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரும் திங்கட்கிழமை நூறு நாள் வேலை வாய்ப்பு வழங் காவிடில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபடு வோம் எனவும் தெரிவித்த னர்.