districts

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

கடலூர், ஜூலை 27- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே  உள்ள செம்பலக்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜயன் (24), அருகில் உள்ள பெரிய கண்டி யங்குப்பத்தில் உள்ள செராமிக் தொழிற் சாலையில் வேலை செய்து வந்தார். அப்போது, அந்த பகுதிக்கு வந்து சென்ற  12ஆம் வகுப்பு மாணவியுடன் விஜயன் பழகி  வந்துள்ளார். இதில், அவரை தனியாக அழைத்துச் சென்று இரண்டு முறை பாலி யல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுந்த அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்திட போதும், விஜயன் மறுப்பு தெரி வித்ததோடு, அவரும் அவரது குடும்பத்தின ரும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தன ராம். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து, அந்த மாணவி விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  27-8-2017 அன்று புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலை யில் அந்த வழக்கில் நீதிபதி எம்.எழிலரசி திங்க ளன்று தீர்ப்பு கூறினார். அதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விஜயனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5  ஆயிரம் அபராதமும் விதித்தார். இதனை யடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;