districts

கார் ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை, மார்ச் 10-  காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் திருப்பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (24), கார் ஓட்டுநரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல்  12 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யாவை கைது செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ வழக்கு தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 10 ஆண்டு சிறை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஜெயசூர்யாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயசூர்யாவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

;