சென்னை,ஏப்.7- சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளநிலையில் காய்கறியின் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக தினசரி 550 லாரிகளில் வந்து குவிந்த காய்கறிகள் தற்போது 450 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் காய்கறி விலை வழக்கத்தை விட 10 விழுக்காடு அதிகரித்து உள்ளன கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ100 வரை விற்பனை ஆகிறது. அதே போல் ஊட்டி கேரட் விலை யும் தொடர்ந்து ஏறுமுக மாகவே இருந்து வருகிறது.