districts

img

செஞ்சி தொகுதியின் 10 கோரிக்கைகள்: ஆட்சியரிடம் வழங்கினார் அமைச்சர்

விழுப்புரம், செப். 8- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், அடிப்படை வசதிகள் தொடர்பான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்புவதற் காக, மாவட்ட ஆட்சியர் த. மோகனிடம் அந்த தொகுதி எம்எல்ஏவும், தமிழக சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார். அந்த மனுவில், செஞ்சிக் கோட்டையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். செஞ்சி - வல்லம் ஒன்றியங்களை இணைக்கும் சங்கராபரணி ஆற்றைக் கடந்து செல்லும் மேற்கலவாய் ஆற்றங் கரையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். செஞ்சி அரசு பொது மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். பெரம்ப லூர் ஊராட்சியில் சமத்துவப் புரம் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரி வித்துள்ளார்.

;