districts

img

தொடரும் நாய்கடியால் 10 ஆயிரம் பேர் பாதிப்பு

சென்னை, ஜூலை 17-  சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை என்பது தீராத பிரச்சனை யாக இருந்து வருகிறது. தெருக்களில் ஓடி விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் நாய்கள் வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குறைந்தாலும் சமீப கால மாக நாய் தொல்லைகள் அதிகரித்து வரு கின்றன. நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எல்லா மண்டலங்களிலும் வாகனங்களில் ஊழியர்கள் தினமும் சென்று நாய்களை பிடிக்கின்றனர். இருப்பினும் தெரு நாய்களின் தொல்லை குறையவில்லை. சென்னையில் நாய் கடிச்சம்பவம் அதி கரித்து வருவதால் குழந்தைகள் பாது காப்பு குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் 20  ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நாய்கடி வழக்குகள் பதிவாகிறது. ஆனால் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்கள் மிக குறைவு. வட சென்னை பகுதியில் நாய் கடி சம்பவம் அதி களவில் நடந்தாலும் பதிவு செய்யப்படாத வழக்குகள் பல உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி கால்நடை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக் கெடுப்பின்படி 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது. இப்போது 2  லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.