போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒன்றியத் தலைவர் சா.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பி.முரளி, சங்கராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி கவுன்சிலர் எம்.எஸ்.பரிதா, அரசு மருத்துவர் ராஜ்மோகன், ஒன்றியக் கவுன்சிலர் ச.சசிகுமார், சங்கத்தின் மாவட்டச் செயலாளர். மு.சிவக்குமார் தலைவர் செ.சிவாஜி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பாஸ்கர், அ.பாண்டலம். வே.ஏழுமலை, பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.