districts

img

சென்னையில் ‘ஊரும் உணவும்’ திருவிழா

சென்னை, ஜூலை 5- சென்னை செம்மொழி பூங்கா வில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா வெள்ளிக் கிழமை (ஜூலை 5) முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறு கிறது. தமிழ்நாடு அரசு மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் ஐக்கிய நாடுகளின் ஆணையம் மற்றும் ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவை மக்களவை குழுத் தலைவர் கனிமொழி கரு ணாநிதி தொடங்கி வைத்தார். பின்னர் கனிமொழி கூறுகையில், சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவுத் திருவிழா புலம் பெயர்ந்த மக்கள் அவர்களுடைய உணவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள இந்த ஆண்டும் நடைபெறு கிறது. சென்ற ஆண்டை விட கூடு தலான கடைகள் திறக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து நடைபெற வேண்டும், தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களுக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். இங்கு இருக்கக்கூடிய சகோதர சகோதரிகள் இந்த நாட்டை ஒரு புகலிடமாக உருவாக்கிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிவை ஏராளமாக இருக்கிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு இன்றைக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து கொண்டிருக் கிறது. நாம் ஒன்றிய அரசிடம், அவர் களுக்குக் குடியுரிமை கிடைக்கத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கி றோம். நீட் வேண்டாம் என்பதில் உறுதி தமிழ்நாடு அரசு நீட் வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே தெரி வித்து வருகிறது. இப்போதுதான் மற்ற மாநில முதலமைச்சர்கள், பொது மக்கள் இதற்குப் பின்னால்  உள்ள பிரச்சினைகளை உணர்ந்துள் ளனர். மக்களவையில் இதுகுறித்து விவாதிக்க ஒரு நாள் ஒதுக்கியிருக் கலாம். ஆனால் ஆளுங்கட்சியினர் நீட் பற்றி விவாதிக்க முன் வர வில்லை, மணிப்பூர் பற்றிப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த சூழல் தான் மக்களவையில் இருக்கி றது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவ தற்குத் தொடர்ந்து திமுக முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் கூறி னார். மேலும் மக்களவையில் பிரதமர் உரையாக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றால் குறுக்கிடுவதற்கு அனுமதி க்கப்படுவார். ஆனால் தற்போது அதற்கு அனுமதி இல்லை. எதிர்க் கட்சியினர் பேசும்போது யார் வேண்டுமானாலும் குறுக்கிடலாம். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும்போது குறுக்கிடும் உரிமை மறுக்கப்படுகிறது என்றும் கனிமொழி தெரிவித்தார். உலக அகதிகள் தினத்தை (ஜூன் 20 அன்று கொண்டாடப்படும்) நினைவுகூரும் வகையில் இரண்டா வது முறை இந்தத் திருவிழாவை நடைபெறுகிறது.  இந்த உணவுத் திருவிழா வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. இந்த திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.  இதில் வடசென்னை மக்களவை  உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மார்கரெட் விண்மா (மிஷன் துணைத் தலைவர், ஐ.நா. உயர் அகதிகள் ஆணையம்), வளன் மைக்கேல் (தொகுதி அலுவலகத் தலைவர், ஐ.நா. உயர் அகதிகள் ஆணையம்), எஸ்.சி.சந்திரஹாசன் (ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு), சதீஷ் (உணவுப் பாது காப்பு இயக்குநர்), ரமேஷ் (துணை இயக்குநர், மறுவாழ்வு ஆணை யம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.