districts

சென்னை முக்கிய செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’திட்டம்

ராணிப்பேட்டை, ஆக. 7 –  ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ (ஊரகம்) திட்டத்தின் மூலம் முக்கிய அரசு துறைகளின் சேவைகள் , சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களின் வசிப்பிடங்களின் அருகிலேயே நடைபெறவுள்ளது. இம் மாதம் 30 ஆம் தேதி வரை 7 வட்டங்களில், 15 துறைகளை  ஒருங்கிணைத்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாலாஜா அனந்தலை சமுதாய கூடம், திமிரி - கனியனூர் (அரசு உயர்நிலைப்பள்ளி), சோளிங்கர் கூடலூர் (ஆதிலட்சுமி திருமண மண்டபம்), காவேரிப்பாக்கம் பன்னியூர் (கஸ்தூரி சதாசிவம் திருமண மண்டபம்), அரக்கோணம் மோசூர் (அரசு மேல்நிலைப்பள்ளி) மற்றும் நெமிலி - திருமால்பூர் ஆகிய ஊராட்சிகளில் ஆக. 8 அன்று காலை 10 முதல் மதியம் 3 மணி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை நேரில் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர்  சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைக்கு  நோய் எதிர்ப்பாற்றலை  தருவது தாய்ப்பால் மட்டுமே!  வேலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சு

காட்பாடி, ஆக. 7 வேலூர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை காட்பாடி வட்டம் திருப்பாகுட்டையில் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக உல கெங்கும் உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை சிறப்பாக அமைய, முதல் உன்ன தான ஊட்டச்சத்து தாய்ப்பால் என்பது அறிவியல் பூர்வ மாக நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே தாய்ப்பாலின் மகத்து வத்தை அனைவரும் உணர வேண்டும். குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதோடு, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களிலிருந்து பெரு மளவு பாதுகாக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய வரும் வாய்ப்பு கள் குறையும். குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்க ளுக்கு மூளை 80 விழுக்காடு வளர்ச்சி அடைகிறது. இச்சமயத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்றும்  ஆட்சியர் தெரிவித்தார்.

சிறுமியை கிண்டல் செய்த போதை ஆசாமிகள்: தட்டிக் கேட்ட தந்தை மீது  கொலை வெறித் தாக்குதல 

புதுச்சேரி,ஆக.7- புதுச்சேரியை சேர்ந்த 14 வயது நிரம்பிய  சிறுமி சம்பவத்தன்று வீட்டருகே மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் சிறுமியை கேலி, கிண்டல் செய்துள்ளார்.   இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று நியாயம் கேட்ட தந்தை, தாய் இருவரையும் அந்த கஞ்சா வாலிபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அக்கம், பக்கம் இருந்தவர்கள், கஞ்சா வாலிபர்களிடம் இருந்து மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அலட்சியம் இதுகுறித்து புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு  செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கஞ்சா கும்பலுக்கு ஆதரவாக டி. நகர் காவல் நிலைய உயர் அதிகாரிகள் செயல்படுவதாகவும் சிஐடியு புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்க சிறப்பு தலைவர் பிரபுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலுக்குள்ளானவர் சாலையோர வியாபாரிகள் வென்டிங் கமிட்டி உறுப்பினராக உள்ளார்.

மைதானத்தை சிறுவர் பூங்காவாக  மாற்றக்கோரி சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி,ஆக.7- புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள பெத்தி செட்டி பேட்டைக்குட்பட்ட கொல்லி மேடு மைதானத்தை சிறுவர் பூங்காவாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்துவருகிறது.   சுற்றிச் சுவர் அமைத்து, நடைப்பயிற்சிக்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். குளக்கரை வீதியில் ரேசன் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரேசன் கடையை கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. உழவர்கரை நகர குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன், உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி மற்றும் குமார், நிலவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

என்எல்சியில் பாதுகாப்பு குறைபாடு  உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு வேலை வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், ஆக.7- என்எல்சி நிறுவனத்தில் பாதுகாப்பு குறை பாட்டால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுரங்கம் 1  கன்வெயரில் மண் கொட்டு வதற்கு சைகை (சிக்னல்) கொடுத்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளி குழந்தைவேலு மீது புல்டோசர் ஏறியதில்  உடல் நசுங்கி பலியானார். இதுபோன்ற, கடந்த மாதம் சுரங்கம் -2 இல் பணியாற்றிய தொழிலாளி கே. அன்பழகன் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் தொழிலாளர் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளில் என்எல்சி நிறுவன சுரங்கங்கள் பாதுகாப்புக்கான பல்வேறு நற்சான்றிதழ் களையும் வெகுமதிகளும் பெற்றுள்ளது. ஆனால், சமீப காலங்களில் நடந்து வரும் தொடர் மரணம், தொடர்ந்து ஏற்படும் விபத்துக்க ளால் தொழிலாளர்கள் உயிருக்கு பாது காப்பில்லாத நிலை உள்ளது . எனவே, என்எல்சி நிர்வாகம் சம்பந்தப் கட்ட சுரங்கங்களின் நிர்வாகங்களும் தொழி லாளர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க போதிய பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

மூளைக்கட்டியால் கோமாநிலையை அடைந்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, ஆக.7- மூளைக்கட்டியால் கோமா நிலையை அடைந்த பெண்ணை சென்னையை சேர்ந்த  மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். அந்தமான் தீவுப்பகுதியை சேர்ந்த 51 வயது பெண்ணிற்கு அங்குள்ள மருத்துவ மனையில்கர்ப்பப் பை அகற்றும் அறுவை  சிகிச்சைக்காக முதுகுதண்டில்  மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்  கோமா நிலைக்கு சென்றார். இடுப்புக்கு கீழ்  அறுவை சிகிச்சைக்கு மயக்க ஊசி செலுத்தப்படுவது வழக்கமான மருத்துவ சிகிச்சை முறை என்றாலும்  முதுகுதண்டில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தை தொடர்ந்து மூளையில் உள்ள திரவம் வெளியேறத் தொடங்கியது. இதனால் மூளையில் ஏற்பட்ட திடீர் அழுத்தம் காரணமாக அந்த பெண் கோமா நிலைக்கு சென்றார். அப்போது அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப்பார்த்தபோது மூளையில் ஆபத்தில்லாத 8 செ.மீ அளவில்  பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து சென்னை எம்ஜிஎம் மருத்துவ மனைக்கு விமானத்தில் அவரசர அவசரமாக  அழைத்துவரப்பட்ட அந்த பெண்ணிற்கு டாக்டர் ருபேஷ் குமார் தலைமையிலான குழுவினர் கட்டியை சுற்றியிருந்த ரத்த நாளங்களுக்கு பாதிப்பு இல்லாமல் அறுவை  சிகிச்சையை முடித்தனர். ஒரு நாள் தாமதம் ஆகியிருந்தாலும் அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும்  அவர் கூறினார்.  நுட்பமான திட்டமிடல் துல்லியமான சிகிச்சையால்  அந்த பெண் தற்போது நன்கு  தேறிவருவதாகவும் விரைவில் அந்தமான் செல்ல இருப்பதாகவும் ருபேஷ் தெரிவித் தார்.

சினிமா உதவி எடிட்டர் மயங்கி விழுந்து பலி

சென்னை, ஆக.7-  ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் (48). சினிமா உதவி எடிட்டரான இவர், வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஒரு வாரமாக, உடல் நலக்குறைவு காரணமாக இவர் சிகிச்சை  பெற்று வருகிறார். இந்நிலையில், திங்களன்று  மருந்து வாங்க அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது  திடீரென மயங்கி கீழே விழுந்து  இறந்தார்.

மூதாட்டி வீட்டில் 7 சவரன் திருட்டு

சென்னை, ஆக.7-  அரும்பாக்கத்தில் மூதாட்டியின் வீட்டில் இருந்த 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகின்றனர். அரும்பாக்கம் அசோக நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்மாள்(72). இந்நிலையில், மாணிக்கம்மாளின் லாக்கரில் இருந்த 7 சவரன்  நகைகள் திங்களன்று மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காலமானார்

திருவள்ளூர், ஆக. 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழவரம் ஒன்றிய செயலாளரும் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், கட்சி உறுப்பினர்கள்  ஜி.வி.டில்லிபாபு, ஜி.வி.பாஸ்கர். ஆகியோரின் தந்தை ஜி.வரதராஜ் (வயது 87), புதனன்று (ஆக 7) காலை உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாடுட்டுக்குழு தலைவர் ப.சுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர்  எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், பி.துளசிநாராயணன், கே.விஜயன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.நடேசன், பி.கதிர்வேல்,  மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்  இ.ஜெயவேல்,  உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தி னர். சொந்த ஊரான ஞாயிறு கிராமத்தில் உள்ள மயானத்தில்  மறைந்த வரதராஜன் உடல் தகனம் செய்யப்பட்டது.