districts

img

100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் மாணிக்கம்தாகூர் எம்.பி

சிவகாசி, பிப்.14- விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் சிவகாசி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு  செய்தார். சிவகாசி ஒன்றியம், ஏ.துலுக்கப்பட்டி யில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும்  கலையரங்க கட்டிடப் பணி களைஆய்வு செய்தார்.   பின்பு ஊராம்பட்டி யில்  நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு பணி களை பார்வையிட்டார். பின்பு, அதன்  பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்தார். இதையடுத்து, விளாம்பட்டி  காம ராஜர்புரம் காலனியில் நடைபெற்று வரும்  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி யளிப்பு திட்டப்  பணிகளை ஆய்வு செய்த தோடு,  பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது,   ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ்,  வழக்கறிஞர் குப்பையாண்டி, வட்டார தலைவர் தர்ம ராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலை வர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;