சிவகங்கை,பிப்.25- கிராமப்புற மாணவர்கள் அறிவாற்றலிலும் சிந்தனை யிலும் யாருக்கும் சளைத்த வர்கள் இல்லை என்று அழ கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது தெரிவித்தார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை மற்றும் தமிழ்த்துறை சார்பில், 2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட் டைச் சேர்ந்த பெண் எழுத்தா ளர் அன்னி எர்னாக்ஸ்க்கு பாராட்டு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலை வர் முனைவர் மதன் வர வேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி பேசுகையில், மாணவர் கள் நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான அன்னி எர்னாக்ஸ் போன்று தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கிரா மப்புற மாணவர்கள் அனைத்து வகையிலும் அறிவாற்றலி லும் சிந்தனையிலும் யாருக் கும் சளைத்தவர்கள் இல்லை. ஒழுக்கத்திலும் மன தைரி யத்திலும் நேர்மறை சிந் தனை பெற்றிருப்பதிலும் நலிந்த சமூகம் மற்றும் பொரு ளாதார பின்னணியிலிருந்து வருபவர்கள் சிறந்தவர் களாக விளங்குகிறார்கள் என்றார். புதுகோட்டை ராஜா அரசு கல்லூரி பேராசிரியர் கணேசன் உரையாற்றினார். முனைவர் வள்ளியம்மை நன்றி கூறினார். மாணவ, மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.