கோவை, செப். 26- பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவ தும் மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதி யாக கோவையில் ஆயிரக்கணக்கா னோர் திரண்டு போராட்டத்தை முன் னெடுத்தனர். கோவை டாடாபாத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு அனைத்து தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வா கிகள் தலைமையேற்றனர். பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். வாரிய ஆணை எண்:2, 12.04.2022-யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபகிர்வு முறையை கைவிட வேண் டும் வெளி ஆட்களை பணியமர்த்தக் கூடாது. காலிப்பணியிடங்கள் அனைத் தையும் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக் கங்களை எழுப்பினர். முன்னதாக, ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் போராட்டத்தில் பங் கேற்று பணியை புறக்கணித்து கையெ ழுத்து போடாமல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொட ரும் என போராட்டத்தில் பங்கேற்ற வர்கள் தெரிவித்தனர்
ஈரோடு
ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற் பொறியாளர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத் திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் சி. ஜோதிமணி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரம ணியன், உதவித்தலைவர் ஆர்.ரகுரா மன், ஏஐடியுசி ராஜேந்திரன், ராமசுப்பிர மணியம், மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் வரதராஜன், மின்வாரிய தொழிலாளர் சம்மேளன நிர்வாகி அய் யாசாமி, மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெட ரேசன் ஈரோடு மண்டல செயலாளர் நந்த குமார், பொறியாளர் சங்க முன்னாள் மண்டல செயலாளர் கே.பாண்டியன், கிளை செயலாளர் கே.பாண்டியன், திரு நீலகண்டன், ஓய்வூதியர் சங்க செயலா ளர் கே.எஸ்.மோகன், எம்.பெருமாள், பொறியாளர் கழக நிர்வாகச் செயலா ளர் அருணாசலம், மண்டல செயலாளர் தினகரன், ஏஇஎஸ்யு மண்டல செயலா ளர் பாலசுப்ரமணியம், ஐஎன்டியுசி ராஜாமணி, பிஎஸ்என்எல் சி.பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐ டியு மாநில துணைத்தலைவர் பி.ஜீவா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பண்டக பிரிவு செயலா ளர் ஷாகின்ஷா வரவேற்புரையாற்றி னார். சம்மேளன மாநில துணைத்தலை வர் தேவராஜன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், சிஐ டியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் டி. லெனின் மகேந்திரன், பொருளாளர் சீனி வாசன், மின்வாரிய பொறியாளர் அமைப் பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி, ஏயூஎஸ்யூ மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், என்எல்ஒ மாவட்ட செயலாளர் பிரபாக ரன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வர தேசாய், பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் முரளி, பொறியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், அம் பேத்கர் எம்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் மாதேசன், எம்ளாயீஸ் பெட ரேசன் மாவட்ட செயலாளர் கோகுல தாஸ், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் சி.முருகன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம், உடையாப்பட்டி பகுதியில் உள்ள மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எம்ப்ளாயீஸ் பெடரேசன் மாநில செயல் தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு சேலம் மின் திட்டக்கிளை தலைவர் கருப்பண்ணன், செயலாளர் ரகுபதி, இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் ஜெயக் குமார், எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் மாநில இணைச்செயலாளர் எஸ்.புக ழேந்தி, ஐக்கிய சங்கத்தின் செயலாளர் பி.ராமகிருஷ்ணன், ஏஇஎஸ்யு வட்ட செயலாளர் மகாலிங்கம், இன்ஜினிய ரிங் சங்க செயலாளர் குமரேசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சையத் அலி, தொழிலாளர் சம்மேளன செயலாளர் மணி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் முத்து சாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற் பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண் டனர்.
நீலகிரி
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஐக்கிய சங்க செயலாளர் பாபு தலைமை வகித்தார். இதில், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலா ளர் சண்முகம், சிஐடியு மாவட்ட செயலா ளர் ஆர்.ரமேஷ், பொறியாளர்கள் சங்க செயலாளர் சந்தீப், என்எல்ஓ சங்க செய லாளர் சுரேஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.