சிவகங்கை, பிப்.16- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 61 நெல் கொள்முதல் மையங்களில் விவசாயி களிடம் ரூ .40 முதல் ரூ. 50 வரைக்கும் லஞ்ச வசூல் செய்கிற நடவடிக்கையை கண் டித்தும் அதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற் றுகை போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் சில குறிப் பிட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் விளைச்சல் நடந்துள்ளது. விவசாயி களுக்கு நியாயமான கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வரு கிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சார்பாக சிவகங்கை மாவட்டத்தில் 61 மையங்களில் நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட் டுள்ளது. இக் கொள்முதல் மையங்களில் ஒரு சிப்பத்துக்கு ரூபாய் 40 முதல் ரூபாய் 50 வசூல் செய்யும் தடுத்து நிறுத்த வலி யுறுத்தி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப் போது மாவட்ட ஆட்சித் தலைவர் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து மையங்களிலும் ஒரு சிப்பத் துக்கு இவ்வளவு ரூபாய் விலை நிர்ண யம் செய்து அதை தகவல் பலகையாக எழுதி வைக்க வேண்டும் .பணம் எதுவும் வசூல் செய்யக்கூடாது. வசூல் செய்தால் கைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் என்று தகவல் பலகை வைக்கப்படும் என்று அன்றைய தினம் அறிவித்தார். ஆனால் தற்போது வரை அதனை செயல்படுத்த வில்லை. வழக்கம்போல் விவசாயிகளிடம் வசூல் செய்கிற நடைமுறை இருந்து வரு கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமன், மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விசுவநாதன், மாவட்ட துணை தலைவர் அழ கர்சாமி, மாவட்ட துணை செயலாளர் அண் ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்ட னர். இப்போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் அருண் பிரசாத் தலை மையில் சமாதான கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். ஏனாதி கிராமத்தில் நெல் கொள்முதல் மையத்தில் தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் காவல்துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்வோம். நெல் கொள் முதல் மையங்களில் தவறு செய்ப வர்கள் மீது காவல்துறை மூலமாக நட வடிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறோம் என்று தெரிவித்தார்.