districts

பட்டாசு வெடி விபத்தில்  தொழிலாளி பலி

திருவள்ளூர்,ஏப்.5- திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் கடந்த 2-ந்தேதி மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது.  அப்போது வான வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்  பாக்கத்தில் இருந்து பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி (36) மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் ஏராளமான பட்டாசுகளை காலியான இடத்தில் வைத்து வெடித்த போது, அருகில் வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் அங்கி ருந்த அனைத்து பட்டாசு களும் வெடித்து சிதறி யது. இதனால் அருகில் இருந்த பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலிக்கு இடது கால் சிதைந்தது. ஊழி யர் சஞ்சீவி உடல் முழுவதும் கருகினார். அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

;