சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உடல் திறன் விழிப்புணர்வு பேரணி சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்றது. பேரணியை சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். ரோட்டரி மண்டல துணை ஆளுநர் திருஞானசம்பந்தம், சிதம்பரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அருண், மருத்துவர் பாலாஜி சாமிநாதன், சஞ்சய் குமார் ஊர்க்காவல் படையினர் வேதரத்தினம், கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்று பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ரத்தம், சர்க்கரை அளவு, பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.