districts

img

பொள்ளாச்சி: அழுகி தூக்கில் தொங்கியபடி தலித் இளைஞர் உடல் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சி பாலமநல்லூர் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் தலை மற்றும் உடல் அழுகி துண்டாகிய நிலையில் தலித் இளைஞர் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்  இது கொலையா? தற்கொலையா? என  பொள்ளாச்சி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் புதூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் சனியன்று காலை அவரது மகன் குமரவேல் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள மா மரம் ஒன்றில் அழுகிய நிலையில் தலை தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர், கீழே பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிரேதம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. 
உடனடியாக அவர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை சேகரித்த வந்த நிலையில், இறந்தவர் பாலமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து(27) என்பதும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பாததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 
பணிக்கு செல்வதாக கூறி சென்ற வீரமுத்து மாந்தோப்புக்கு எதற்காக சென்றார். அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையா யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

;