districts

img

ஆதரவற்ற குழந்தைகளுக்காக “பூந்தளிர்களுக்குப் புத்தாடை திட்டம்”

திருப்பூர், அக்.29- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட் டாரத்தில் ஆதரவற்ற பள்ளி மாணவர்க ளுக்கு  சிலம்பு கவுண்டன் வலசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசியர் கோ.பிரபாகர் தலை மையில் செவ்வாயன்று புத்தாடைகள் வழங் கப்பட்டன. வெள்ளகோவில் வட்டாரம் பச்சாபாளை யம் கிராமத்தில் அமைந்துள்ள சிலம்ப கவுண் டன் வலசு என்ற ஊரில் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர்  கோ.பிரபாகர். வெள்ளகோவில் வட்டாரத் தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதரவற்ற  மாணவர்களுக்கு இவரது தலைமையில்  வருடா வருடம் தீபாவளி திருநாளை முன் னிட்டு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக பெற்றோரை இழந்த, ஒற்றைப் பெற்றோர் கொண்ட,பெற்றோரை முற்றிலும்  பிரிந்துள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிய படித்துக் கொண்டிருக்கும் இளம் தளிர்களுக்கு, “பூந்தளிர்களுக்குப் புத் தாடைத் திட்டம்” என்ற பெயரில் திட் டத்தை நடத்தி வருகிறார்கள். இத்திட்டம் கடந்த எட்டு ஆண்டுகளாக சிலம்பக் கவுண் டன் வலசு ஊரில் நடந்து வருகிறது. தற்போது ஒன்பதாவது ஆண்டாக இத்திட் டத்தில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று புன் சிரிப்புடன் புத்தாடைகளைப் பெற்றுச் சென்ற னர். இந்நிகழ்வுக்கு வருகை புரிந்த குழந்தை களை பன்னீர் தெளித்து உள்ளன்போடு சிலம் பகவுண்டன் வலசு பள்ளிக் குழந்தைகள் வர வேற்றனர். தற்காலிக ஆசிரியை கவிதா, வந் திருந்த குழந்தைகளின் பாதுகாவலர்களின் உறுதிமொழிச் சான்று பெற்று, ஒழுங்குபடுத் தினார்.  மொழிபெயர்ப்பு ஆசிரியை தி.கார்த்திகா குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய புத்தா டைகளை வரிசைப்படுத்தினர். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் திவ்யா, துணைத் தலைவர் மைதிலி, முன்னாள் தலை வர் ராஜேஸ்வரி ஆகியோர் அனைவருக்கும்  இனிப்பு காரம் தேநீர் வழங்கி உபசரித்தனர். அனைத்து குழந்தைகளுக்கும் மதி யம் உணவு வழங்கப்பட்டது. பின்னர் ஊர்  இளைஞர்கள் சார்பில் மாபெரும் தீபாவளி  வாணவேடிக்கைத் திருவிழா நடத்தப்பட்டது.  இந்த நிகழ்விற்கு திருப்பூர் ஜஸ் கப்ஸ், நெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் வட் டார ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் என பல ரும் புத்தாடைகளை வழங்கியிருந்தனர். திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் பணி யாளர் நண்பர்கள் மதிய உணவினை வழங் கினார்கள். இந்த நிகழ்வு குறித்து கோ.பிரபா கரிடம் கேட்டபோது, சிலம்பகவுண்டன் வலசு  ஊரில் தான் இந்தியாவிலேயே முதன் முறை யாக காலை உணவுத் திட்டத்தினை நடத்தி னோம். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் னர் தமிழக அரசே காலை உணவுத் திட்டத்தை  நடத்த துவங்கி, தமிழகம் முழுவதும் பயன டைந்தது. அதேபோல் செவ்வாயன்று ஒன்ப தாவது ஆண்டாக நடைபெற்ற பூந்தளிர்க ளுக்குப் புத்தாடைத் திட்டத்தினை அரசு  வருடா வருடம் அரசுப் பள்ளிக் குழந்தைக ளுக்கு சீருடை வழங்குவது போல ஏதாவது  ஒரு திருநாளுக்கு வண்ணப் புத்தாடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமி ழக முதல்வரும், துணை முதல்வரும் பரிசீ லிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் சிலம்ப கவுண்டன் வலசு மற்றும் சுற்று வட்டார  கிராம மக்கள் தங்கள் வீட்டுத் திருவிழா போல்  மகிழ்வாய் பங்கேற்றனர்.