கோவை, நவ.19- கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் திங்களன்று (இன்று) “இதழாளர் – கலைஞர்” கருத் தரங்கம் நடைபெற உள்ளதென ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கலைஞர் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கத்தினை கடந்த அக்.18 ஆம் தேதியன்று அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்த புகைப்படக் கண்காட்சி நவ.20 ஆம் தேதியன்று (இன்று) வரை நடைபெற உள்ளது. இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நவ இந்தியா பகுதியிலுள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில் “இதழாளர் – கலைஞர்” கருத்தரங்கம் திங்களன்று (இன்று) நடைபெற உள்ளது. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், த.மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும், இக்கருத்தரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து தலை மையில், மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம், பேராசிரியர் பர் வீன் சுல்தானா, கவிஞர் கவிதாசன், புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகிய ஆளுமையாளர்கள் பங் கேற்க உள்ளனர். இக்கருத்தரங்கில் “இதழாளர்- கலைஞர்” சிறப்பு மலரை கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ ஜி.பக்தவத்சலம் வெளியிட, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரசு வதி கண்ணையன் பெற்றுக் கொள்ளவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.