வரி உயர்வைக் கண்டித்து கடையடைப்பு கோபி, ஜன.3- வரி உயர்வைக் கண் டித்து கோபியில் வெள்ளி யன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற் றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சொத்து வரி யின் மீது காலதாமத கட்டணம் ஒரு சதவிகிதமும், வருடந் தோறும் 6 சதவிகித வரியேற்றம் என்பதை ரத்து செய்து, பழைய வரியை வசூலிக்க வேண்டும். நகராட்சியில் ஆண்டு தோறும் வர்த்தக உரிமம் என்ற பெயரில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் விதித்திருப்பதை, ஒரேமாதிரியாக குறைந்தபட்ச தொகையாக விதிக்க வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறை படுத்த வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டி பாளையத்தில் ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில், வெள்ளியன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கோபி பேருந்து நிலையத்தின் உட்பகுதியிலும், வெளிபகுதியிலும் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் கடைவீதி, கச்சேரிமேடு ஆகிய பகுதிகளிளிருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி சார் ஆட்சியர் சிவா னந்தாவிடம் ஆல் டிரேடர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் மனு அளித்தனர்.