districts

img

கோவை திமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்

ஏற்கனவே உள்ளாட்சி பிர திநிதியாக இருந்த நான், உங் களின் மனநிலையை புரிந்து கொண்டு, உங்களுக்கு தேவையானவற்றை செய்து  கொடுப்பேன் என கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரித் தார். இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வழியாம் பாளையம், காப்பிக்கடை பஸ் ஸ்டாப், விசு வாசபுரம், விளாங்குறிச்சி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண் டார். தொடர்ந்து பல்லடம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட கோம்பங்காட்டு புதூர், இச் சிப்பட்டி, பள்ளிபாளையம், நடுவேலம் பாளையம், சுக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.  அப்போது பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை மக்களுடன் மக்களாக இருப்பவன் நான், ஏற்கனவே உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்த நான்,  உங்களின் மனநிலையை புரிந்து கொண்டு, உங்களுக்கு தேவையானவற்றை செய்து  கொடுப்பேன். கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது திமுக அரசு தான். சிறுவாணி குடிநீர்  மட்டுமல்ல, பில் லூர் முதலாம் குடிநீர் திட்டம், பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்டம், தற்போது சமீபத் தில் பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தை  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தற்போது பருவ மழை குறைவானதால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருந் தாலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளது. உங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார்.  இந்த பிரச்சாரத்தின்போது, வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில மாணவரணி துணைச்செயலா ளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலை வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.