அவிநாசி, ஆக.21 - அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நடத்தினர். இதில் 22 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த முகாமிற்கு வாலிபர் சங்கர் நிர்வாகி ராஜகுரு தலைமை ஏற்க, நவநீதன் துவக்கி வைத்தார். இதில் வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வீ.பாலசுப்பிரம ணியன், மாவட்ட ரத்ததான கழக கன்வீனர் விவேக், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் நந்தகோபால், திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப் பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி சிவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.